கொடியக்கரை

லங்கைக்கு கொடியக்கரை வழியாக ரூ. 3 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த சில நாட்களாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது.  கஞ்சா பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.  பிறகு கஞ்சாவை நாகை மாவட்டத்தில் உள்ள கொடியக்கரை வழியாகக் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.:

அவ்வகையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை விசைப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை தனிப்படை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. நாகை மேலப்பிடாகை அருகே தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மூட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.