வேலூர்

,மித்ஷா பேசிக் கொண்டிருந்த போது பேனர் ஒன்று சரிந்து விழுந்ததால் வேலூர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை அருகே உள்ள கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளனர். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநகர் முழுவதும் மிகப்பெரிய பேனர், கொடி உள்ளிட்டவை வைத்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இவ்வாறு வேலூரில் நடைபெற்ற, பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது, மேடை அருகே இருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.  அந்த பேனர் அருகே மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த பகுதியில் இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.