சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் , பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு , வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக , தேர்தல் நடைபெறும் பகுதிகளில் , அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து  தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது .

எனவே , தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் , கிளைகளுக்கு 19 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது . பிற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது .