சென்னை: 
மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன்  போட்டியிடுகின்றனர்.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இறப்பு, ராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 9&ந் தேதி நடைபெறவுள்ளது.
மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன்  போட்டியிடுகின்றனர்.
இதில் பங்காரு அடிகளார் மனைவியின்  சொத்து மதிப்பு மட்டும் சுமார் 250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.