மும்பை: பெங்களூருவுக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் நடந்துவரும் போட்டியில், டாஸ் தோற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

புள்ளிப் பட்டியலைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் அணி 7வது இடத்திலும், பெங்களூரு அணி 2வது இடத்திலும் உள்ளன.

இப்போட்டியில், டாஸ் வென்ற விராத் கோலி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி ஆடிவரும் ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும், மனான் வோராவும் களமிறங்கினர். இந்நிலையில், ஜோஸ் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடந்த 2 போட்டிகளில் சரியாக விளையாடாத கேப்டன் சஞ்சு சாம்சன், இந்தப் போட்டியிலாவது நன்கு ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூரைப் பொறுத்தவரை, அந்த அணி இதுவரை, தான் ஆடிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. எனவே, இன்றையப் போட்டியிலும் வென்று, புள்ளிப் பட்டியிலில் முதலிடத்திற்கு முன்னேற அந்த அணி முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.