நேற்று பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிகழ்ந்த பஞ்சாயத்துகள் குறித்து விவாதம் செய்து கமல் அதை தீர்த்து வைத்தார்.

ஆனால் அவரையும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் சார் என அனிதா சொன்னது தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அவர் வாய்ப்பு கொடுக்கும்போது வேண்டாம் என மறுத்து விட்டு பின்னர் அவர் என்னை பேச விடாமல் செய்து விட்டார். ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்கிறார் என்பது போல அனிதா நிகழ்ச்சி இடைவெளியில் சனமிடம் பேசினார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் வீடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. நாமினேஷன் ப்ராசஸ் வழக்கம் போலவே நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக அனிதா சம்பத் மற்றும் சுசித்ராவை பலரும் நாமினேட் செய்தார்கள்.

பாலாஜி காதல் கண்ணை மறைக்கிறது என சொன்ன காரணமும் குறிப்பிட்ட பிக்பாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார். இதனால் பாலாஜி கோபம் அடைவது தெளிவாக ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. கேட்டுக்கங்க பா இங்க காதல் எல்லாம் ஒன்னும் பண்ணல. அது போன்ற எண்ணம் இருந்தால், அது பற்றி நான் காதில் கேட்டால், ஏதாவது கேட்பேன்….என அனைவரிடமும் கோபத்துடன் தெரிவித்துவிட்டு கிளம்பிச் செல்கிறார்.

அதன் பின் பெட்ரூமில் ஷிவானியிடம் பாலாஜி பேசும் போது, ஒரு வேளை காதல் வந்தால் நான் உன்னிடம் சொல்கிறேன் சரியா. அது வராது.. வந்தால் சொல்கிறேன் என பாலாஜி தெரிவிக்கிறார்.