பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட்ததுக்கு தற்போது சூர்யா41 என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே இவர்கள் கூட்டணிய்ல உருவான நந்தா, பிதாமகன் இரு படங்களும் பெரு வெற்றியைப் பெற்றதோடு, சிறந்த படம் என்கிற விமர்சனத்தையும் பெற்றன.
தவிர, 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்து எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இடையில், சூர்யாவை மீண்டும் மீண்டும் ஒரே காட்சியில் நடிக்கச் சொல்லி பாலா டார்ச்சர் செய்ததாகவும் அதனால் கோபமான சூர்யா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியதாகவும் ஒரு தகவல் உலவியது. இதனால் இப்படம் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக டிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர் சதீஷ் சூர்யா. இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.