செங்கல்பட்டு

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது  இன்றைய தினத்திற்கு (4-ந்தேதி) விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தகட்டமாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.