சென்னை:
பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவங்க உள்ளது என்றும், வகுப்புகளை தொடங்க ஏதுவாக அறிமுக வகுப்புகளை வரும் 14-ஆம் தேதியே நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.