அயோத்தி:

ர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அந்த பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் நவம்பர் 30ந்தேதி வரை விடுமுறை எடுக்க தடை விதிக்கப்படுவதாக உ.பி. மாநில அரசு அறிவித்து உள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 40 நாட்கள் தொடர் விசாரணை நடத்திய உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது. நேற்றைய கடைசி நாள் விசாரணையின்போது, விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்ற நிலையில், இஸ்லாமிய தரப்பு வழக்கறிஞர் தவான், இந்து அமைப்பு தாக்கல் செய்த ஆவனங்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அயோத்தி பகுதியில் கடமையாற்றி வரும் அதிகாரிகள், களப்பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் அக்டோபர் 30ந்தேதி வரை விடுமுறை எடுக்கக்கூடாது என்றும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் விடுப்பு வழங்கக்கூடாது  மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் உத்தரவிட்டு உள்ளார்.

அந்தந்த அதிகாரிகள் அந்தந்த இடங்களின் தலைமையகத்தில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று சிங்கால் கூறியுள்ளார்.

இதுகுறித்து கூறிய தகவல் தொடர்பு அதிகாரி ஷிஷிர்,  தீபாவளி பண்டிகை மற்றும்   நவம்பர் முதல் பதினைந்து நாட்களில் சாத் (சூரிய வழிபாடு) திருவிழா, பராவாபத், குரு நானக் ஜெயந்தி / கார்த்திக் பூர்ணிமா, கோவர்தன் பூஜா மற்றும் பயா தூஜ் போன்ற மத விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டடு உள்ளது.

ஆனால், அடுத்த மாதம் இறுதி வரை விடுப்பு எடுக்க ஏன் தடை விதிக்க வேண்டும் என்ற கேள்விக்கு,  தனக்கு வேறு எந்த தகவலும்தெரியாது என்று மறுத்து விட்டார்.

ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாக உத்தரபிரதேச நிர்வாகம் கடந்த வாரம் அயோத்தியில் பிரிவு 144 சிஆர்பிசி கீழ் டிசம்பர் 10 வரை தடை உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதன்படி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டு சேர்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா, “அயோத்தி மற்றும் இங்கு வருபவர் களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” “சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் விரும்பத்தகாத செயல்களின் அம்சங்களை உள்ளடக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதுபோல தீபாவளிக்கு மாஜிஸ்திரேட் அனுமதியின்றி பட்டாசு விற்பனை மற்றும் வாங்க அனுமதிக்கப்படாது என்றும்,  அயோத்திக்குள் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனம் ஆகிய வற்றையும்  இந்தஉத்தரவு கட்டுப்படுத்தும் என்றும்,  சட்டம் ஒழுங்கு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு ஏராளமான பாதுகாப்புப் படைகளையும் அங்கு மாநில அரசு குவித்து வருகிறது.