சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் கடையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் எலைட் கடையில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

மதுபிரியர்கள் தங்களுக்குத் தேவையான மதுவகையை தொடுதிரை மூலம் தேர்ந்தெடுத்த பின் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

 

தாங்கள் தேர்ந்தெடுத்த மதுவகைக்கான பணம் செலுத்தியபின் இயந்திரத்தில் இருந்து வெளியில் வரும் அந்த மதுவகையை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான வரவேற்பை பொறுத்து மேலும் பல இடங்களில் இந்த இயந்திரம் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு மதுவகைகள் ஒரு குறித்த அளவு மட்டுமே வைக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான மதுவகையும் அவர்களை குளிர்விக்கும் வகையில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.