camara
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி, சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்கிறது.
நெய்வேலியில் தான் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெய்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் அங்கீகாரத்தை பெற அவர் திட்டமிட்டுள்ளார்.