கான்பெரா

ஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின், பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி வகித்து வந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் தலைவர் ஆவார்.

ஸ்கார் மோரிசன் கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், ரகசியமாகப் பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் என்பது அப்போது பேசு பொருளானது.

தற்போது ஸ்காட் மோரிசன் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

அவர் தனது பதிவில்,

“ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்பு மிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி.  

அனைத்துலக பெருநிறுவனத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், எனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்” 

எனத் தெரிவித்துள்ளார்.