ஸ்லாமாபாத்

யோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  இன்று அயோத்தி ராமர் கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.-

”இன்றைய கும்பாபிஷேக விழாவிற்கு வழிவகுத்த கடந்த 31 ஆண்டுக்கால வளர்ச்சிகள், இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய முஸ்லீம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஓரங்கட்டலுக்கான தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சமாக இவை அமைகின்றன. 

இந்தியாவில் அதிகரித்து வரும் ‘இந்துத்துவா’ சித்தாந்தத்தின் அலையானது மத நல்லிணக்கத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் புனித இடங்கள் உட்படச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.