சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம் செய்து ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு  ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூன் மாதம் வரை உள்ளது. இதற்கிடையில் அணி வீரர் டேரன்லெமன் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில்  பதவி விலகிய நிலையில், தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்  பதவி விலகுவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திடீரென தனது கோச் பதவியை ராஜினாமா செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வாரியம், அவருக்கு பதிலாக இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட்-ஐ நியமனம் செய்துள்ளது.

பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முன்னதாக,பதலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இருந்து வந்த நிலையில்,தற்போது பதவி விலகியிருக்கிறார்.

இது தொடர்பாக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில்,  “ஆஸ்திரேலிய அணியாது இலங்கைக்கு எதிரான T20I தொடரில் விளையாடவுள்ள நிலையில், நமது ஆண்கள் தேசிய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதவியேற்கவுள்ளார்”, என்று தெரிவித்துள்ளது.