கொல்கத்தா:
டுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பு யார் கேப்டன்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிவிப்பார்கள். அடுத்த கேப்டனை முடிவு செய்வது எண் பணி கிடையாது. இருப்பினும் தேர்வுக்குழுவினர், தலைவர், செயலாளர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து உரிய நேரத்தில் அறிவிப்பார்கள்.

கொரோனா காலத்தில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதைற்காக தான் ரஞ்சி கோப்பையை தள்ளி வைத்தோம். இதனால் தான் தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகளை குறைத்துள்ளோம். வரர்களின் ஊதியத்தையும் அதிகரித்துள்ளோம். சையது முஸ்தாக், விஜய் ஹசாரே தொடரில் வீரர்கள் விளையாடி இருப்பதால், அதற்கான போதிய ஊதியம் கிடைத்திருக்கும். இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாது என நம்புகிறேன்.

அடுத்த ஆண்டு முதல் 2 ஐ.பி.எல். தொடர்கள் நடத்தப்பட உள்ளன. ஆடவருக்கு நடத்தும் அதே நேரத்தில் பெண்களுக்கும் பி.சி.சி.ஐ. பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? அணிகளுக்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை. வீராங்கனைகளுக்கு இது போன்று ஏலம் நடத்தி மகளிர் ஐ.பி.எல். நடத்த உள்ளோம் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.