சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4வது நினைவு நாள் ஆகஸ்டு 7ந்தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெறும் சென்னை மாவட்ட திமுக அறிவித்து உள்ளது.

ஆகஸ்டு 7ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நினைவுநாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி, அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைதி பேரணி நடைபெறும் என சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர்கள் அறிவித்து உள்ளனர்.

அமைதிப் பேரணியானது காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முடிவடையும் என்றும், அங்கு திமுக தலைவரும், முதலவருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார், இந்த நிகழ்வில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.