பெங்களூரு

ன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 

தினந்தோறும் பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார் பாலையா வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.  மற்ற வழித்தடங்களை விட விட இதில் மக்கள் நெருக்கடி அதிகமாகக் காணப்படுகிறது.

இன்று காலை பையப்பனஹல்லி-கருடாச்சார்பாலையா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில்கள் முன் அறிவிப்பு இன்றி ஒன்றரை மணிநேரம் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

பிறகு தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 9.20 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக மெட்ரோ ரயில் சேவை சில முறை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.