கான்பூர்

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுல் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று யாத்திரையின் 38-வது நாளாகும். தற்போது  உன்னாவ் நகரில் இருந்து புறப்பட்ட அவர் கான்பூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். வழியில் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள கண்டகர் கிராசிங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்க கான்பூரில் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கான்பூரில் சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

குறிப்பாக ராகுல் காந்தியைப் பகவான் கிருஷ்ணராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை அர்ஜுனனாகவும் சித்தரித்து பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பேனரும் சுவரொட்டியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.