சென்னை: தமிழகத்தில் 8 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். இவர்கள் அனைவரும்  தேர்தலின் போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ‘  கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எழும்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி அன்பரசன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம டிஎஸ்பி வேல்முருகன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.