சென்னை:
2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். மழை பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளை அரசு செய்து வருவதால் பொங்கலுக்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு, 2022ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் இன்று முடித்து வைத்தார்.