இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் தனது 20வது படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ் .
அந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.
அதன் தொடர்ச்சியாக பிரபாஸ் மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பிரபாஸின் 21வது படம் இது.
தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பை பார்த்து வியந்த நாக் அஸ்வின், அவரை தன் படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் . ஆகையால் பிரபாஸின் 21வது படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமியை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.