பிரபல நடிகர் அருள்நிதி நடித்து  ‘கே13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை அருள்நிதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் கே-13 என்ற படத்தின் கதாநாயக னாக அருள்நிதி நடித்து வருகிறார். அவருடன்  ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்டுகிறது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ( FirstLook) போஸ்டரினை படக்குழுவினர் இன்று  வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே டிமான்டி காலனி என்னும் திரில்லர்  நடித்து பெரும் வரவேற்பை பெற்ற அருள்நிதி,  தற்போது உருவாகி வரும் கே-13 படத்திலும் திரில்லர் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.