ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலை எழுதிய கவிஞர் தாமரை.

அந்தப் பாடல் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் :

தமிழர் திருநாளாம் இந்நன்னாளில் மற்றுமோர் நற்செய்தி 😍
திரு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் அவர்கள் திடீரென்று அழைத்தார். தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும்/உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான, தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது, நீங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார்.
எழுதினேன், விரைவில் வெளியாக இருக்கிறது. ‘புயல் தாண்டியே விடியல்’ என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்பதைத் தேர்வு செய்திருக்கிறார். 😍😍😍
இறுதி வடிவத்தை இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன்.
( பாடல் எழுதுமுன்பு தமிழ், தமிழர் நலம் தொடர்பான உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்தது 😊. அதில் தமிழ்த்தேசியமும், அரசியலும், சமூகவியலும் அடக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ! 😊
தமிழ்த்தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன் 😀. அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன் 😀.
தயங்காமல் அள்ளி எடுத்துக் கொண்டார் 💃💃💃.
பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது )! என பதிவிட்டுள்ளார் .

 

https://www.facebook.com/thamarai.kavignar/posts/10218898618325228