புதுச்சேரி:
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவிக்கையில், புதுச்சேரியின் திருநல்லர் தொகுதியில், வாக்களர்களுக்கு வழங்குவதற்காக பிரதமர் மோடியின் உருவம் பதிக்கப்பட்ட 150-க்கு மேற்பட்ட தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கணக்கில் காட்டப்படாத ஒரு
லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யபட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.