மெக்சிகோ

யுதம் ஏந்திய ஒரு கும்பல் மெக்சிகோவில்  14 காவல்துறையினரைக் கடத்தி உள்ளனர்.

அரசு வாகனம் ஒன்று மெக்சிகோவின் சியாபாசின் மாகாணத்தில் காவல்துறையினரை ஏற்றிக்கொண்டு ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது.  அந்த வாகனம் நெடுஞ்சாலையில் சியாபாஸ் பகுதி அருகே சென்றபோது 2 வெள்ளை நிற வாகனங்கள் காவல்துறையினர் சென்ற வாகனத்தை வழிமறித்தன.

வழி மறித்த வாகனங்களில் இருந்து கையில் நவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகத்தை மூடியவாறு மர்ம கும்பல் ஒன்று இறங்கி அவர்கள் காவல்துறை வாகனத்தைச் சுற்றி வளைத்தனர்.  பிறகு ஆயுதங்களைக் காட்டி காவல்துறையினரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்படி மிரட்டி  அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி மர்ம கும்பல் பறிமுதல் செய்தது.

அந்த கூட்டத்திலிருந்த பெண் காவலரை விடுவித்து விட்டு மீதம் இருந்த 14 காவல்துறையினரை வலுக்கட்டாயமாக தங்கள் வண்டிகளில் ஏற்றி சிறை பிடித்துக் கடத்தி சென்றனர். வலைத்தளங்களில் இது குறித்த காணொளி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை கடத்தி செல்லப்பட்ட 14 காவல் துறையினரை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.