சென்னை: ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள, முன்னாள் பாஜக நிர்வாகியான அர்ஜூன மூர்த்தி மறைந்த முரசொலி மாறனுடன் பணியாற்றியவர் கிடையாது. அது தொடர்பாக வெளியான தகவல்கள் தவறானது என்று தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பாஜகவில் அறிவுசார் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அர்ஜூனமூர்த்தி, ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இந்த நிலையில் அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனுடன் பணியாற்றியவர் என்று சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது . இதற்கு தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து  மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் அர்ஜுனமூர்த்தி முரசொலி மாறனுடன் பணியாற்றியவர்  என்று ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜுனமூர்த்தி (முன்னாள் பாஜக, இப்போது திரு. ரஜினிகாந்த்) எனது மறைந்த தந்தை திரு முராசோலி மரனின் இணை / ஆலோசகராக இருந்தார். இது முற்றிலும் பொய். இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களைக் கோருகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.