சவூதி: உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உலகின் பிரபல கால்பந்து வீரர்களைக்கொண்ட அர்ஜென்டினா அணி, உலக கோப்பை போட்டிகளில் ஆடும் வீரர்களை அறிவித்து உள்ளது. இந்த அணியின் கேப்டனாக பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. நடப்பாண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர்  அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் வரும் 20-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் விவரங்களை அர்ஜென்டினா அணி வெளியிட்டு உள்ளது. அதன்படி அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, மெஸ்ஸி கொண்ட 26 பேர்  அணி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர்களாக,  பிராங்கோ அர்மானி , எமிலியானோ மார்டினெஸ் , ஜெரோனிமோ ருல்லி அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆட்டக்களத்தின் முன்கள ஆட்டக்காரர்களாக,  பாலோ டி பாலா , லயோனல் மெஸ்ஸி , ஏஞ்சல் டி மரியா , நிக்கோலஸ் கோன்சலஸ் , ஜோக்வின் கொரியா , லாடரோ மார்டினெஸ் ஜூலியன் அல்வாரெஸ்.

பின்கள ஆட்டக்காரர்களாக,  கோன்சாலோ மான்டியேல் , நாஹுவேல் மோலினா , ஜெர்மன் பெசெல்லா , கிறிஸ்டியன் ரோமெரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி , லிசாண்ட்ரோ மார்டினெஸ் , நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ , மார்கோஸ் அகுனா , ஜுவான் போய்த்

மறும் நடுகள ஆட்டக்காரர்களாக  லியாண்ட்ரோ பரேடெஸ் , கைடோ ரோட்ரிக்ஸ் , என்ஸோ பெர்னாண்டஸ் ,ரோட்ரிகோ டி பால், எக்ஸிகியெல் பலாசியோஸ் , அலெஜான்ட்ரோ கோம்ஸ் , அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.