மும்பை

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி 140 கோடி மக்களின் கூட்டணி என தெரிவித்துள்ளார்..

இன்று மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூட்டத்திற்கு பிறகு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,

”இந்தியா கூட்டண் என்பது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, இது 140 கோடி மக்களின் கூட்டணி. மோடி அரசு தான் சுதந்திர இந்திய வரலாற்றிலேயே  ஊழல் மற்றும் திமிரான அரசு ஆகும்.  பாஜகவினர் தங்களை கடவுளுக்கு மேல் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே தங்களது பெரும் சக்திகள் மூலம் பாஜகவினர் நமது இந்தியா கூட்டணியை உடைக்க முயல்வார்கள். நாம் யாரும் இங்கு பதவி வாங்க வரவில்லை   மாறாக இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வந்துள்ளோம்”.

எனத் தெரிவித்தார்.