மும்பை

த்தியில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

இன்று இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக  மும்பையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க  முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,

“மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது. மத்திய பாஜக அரசு தொடர்ந்து பிரபலமற்றதாகவும் இந்தியா கூட்டணி பிரபலமாகவும் மாறி வருகிறது.

இதுவரை காணமுடியாத சர்வாதிகார ஆட்சியை நாம் இந்தியாவில் கண்டு வருகிறோம். இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மதச்சார்பின்மை, சமூக நீதியைக் காப்பாற்ற ஒண்றிந்துள்ளோம். பாஜகவின் இந்தியாவை பிரிக்க நினைக்கும் திட்டம் நிறைவேறாது. மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை. ஆனால் ரூ7.5 கோடி ஊழல் குறித்து சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணி என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை அரசியல் எதிர்களை அச்சுறுத்தும் அமைப்புகளாக பயன்படுத்துகிறது. மோடி இந்தியா கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறார். நாம் மத்திய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்திலே ஈடுபடவிருக்கிறோம்.”

என்று கூறியுள்ளார்.