சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி சமூகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை பிரபல பத்திரிக்கையாளர் சிமி கார்வால் நேர்காணல் செய்தார். அதில் தனது தந்தை மறைவுக்கு பிறகு இளம் வயதில் தான் சந்தித்த கொடுமைகளை பற்றி பேசிய ரஹ்மான், அடிக்கடி பள்ளிக்கு லீவ் போட்டதால், ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து கொண்டு வருமாறும், அதன்பிறகு அவர் அந்த ஸ்கூலில் இருந்து பாதியிலே படிப்பை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் தெரு தெருவாக அலையுங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என கூறியதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். ஆனால் அது எந்த பள்ளி என்று அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/trolee_/status/1396861852223610886