இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளைப் புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

“தலா அல் பத்ரு அலாய்னா” எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்தபோது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது.

இப்பாடல் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.