வாஷிங்டன்

மெரிக்காவில் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட் கைக்கடியாரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்து. 

ஆப்பிள் நிறுவனம்  ஜபோன், கணினி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்த்து வருகிறது. இந்த நிறுவ்னம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இ செயல்பட்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென்று ஒரு தனித்தன்மை மற்றும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கும், பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோவுக்கும் இடையே காப்புரிமை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. மகிமோ நிறுவனம்  இதுதொடர்பாக சர்வதேச வர்த்தக ஆணையத்தில் வழக்கு தொடுத்தது.

மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதால் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அமெரிக்காவில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கையிருப்பில் உள்ள கைக்கெடிகாரங்களை அங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை செய்யலாம் என்றும் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் சர்வதேச வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.