சென்னை

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சை குறித்த ஆவணங்களை அளித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்  ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு அதிகாரிகள்,  மருத்துவர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.    அப்போது ஆணையம் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை விவரங்களை அளிக்குமாறு அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

அதை ஒட்டி இன்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்துக்கு அளித்துள்ளது.. இரு சூட்கேஸ்களில் இந்த ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தன.   இந்த ஆவணங்களை விசாரணை ஆணையம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.