சென்னை

மிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக அன்வர் ராஜா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று தமிழக வக்ப் வாரிய அலுவலகத்தில் வக்ப் வாரியத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வாரிய உறுப்பினர்கள் அன்வர் ராஜா பெயரை முன் மொழிந்தனர்.

பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் அன்வர் ராஜா வக்ப் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.    இவர் ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் உள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நாடாளுமன்றத்தில் ஷரியத் சட்ட விவாதத்தில் சிறப்பாக உரையாற்றியவர் அன்வர் ராஜா என்பது குறிப்பிடத் தக்கது.