கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிகைகள் ரேவதி, கொங்கனா சென் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு ஜூலை மாத இறுதியில் கடிதம் எழுதினர்.

இந்தக் கடிதம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில், இக்கடிதம் அரசியல் சார்பும், தனிப்பட்ட முறையிலான நோக்கத்தையும் கொண்டிருப்பதாக பதில் கடிதமொன்றை, பிரதமர் மோடிக்கு எழுதியிருந்தனர்.

பல்வேறு சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், பொது தளங்களிலும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர்.

ஆனால் இந்த கடிதத்தின் மூலம் தன் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப் .

“உங்கள் பெற்றோர்க்கு போன் கால் மிரட்டல் , மகளுக்கு இணையவழி மிரட்டல் வருவது யாரும் விரும்ப மாட்டார்கள். குண்டர்களே ஆளப்போகிறார்கள். புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்”, எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதால் இதுவே என் கடைசி பதிவாக இருக்கும். நான் பயமின்றி என் மனதில் தோன்றியதைப் பேச அனுமதிக்கப்படாதபோது, நான் பேசாமலே இருப்பது நல்லது. விடைபெறுகின்றேன்”, எனப் பதிவிட்டுள்ளார்.