சென்னை: 
தீபாவளியை ஒட்டி 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, போக்குவரத்து என 33 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 18 லட்சம் ரொக்கப்பணம், ரூ. 6.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர்  பரிந்துரை செய்துள்ளனர்.