சென்னை: மு.க.ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 5 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது. மேலும் அன்புமணி, டிடிவி தினகரன் மீதான அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அரசின் ஊழல் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் மீது எடப்பாடி அரசு அவதூறு வழக்குகளை பதிவு செய்து மிரட்டி வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும், 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அவதூறு வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 8 அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.