கோவில்பட்டி: பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனாலும் புதிய படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

விபிஎப் கட்டண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சுமூக நிலை ஏற்படவில்லை. அதன் எதிரொலியாக புதிய படங்களின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி முதலே புதிய படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

இந் நிலையில், பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் அரசு என்றைக்கும் தலையிடாது என்றும் கூறினார்.