சென்னை: 
செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சூழல் காரணமாகச் செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.