தூத்துக்குடி

வெளியுறவு அமைச்சருக்கு மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

இன்று தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இதையொட்டி  தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணாமலை தனது கடிதத்தில், மாலத்தீவு கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சரைக் கேட்டு கொண்டுள்ளார்.