சிவகங்கை

ளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தல் பிரச்சினைகள் இருக்காது எனச் சீமான் கூறி உள்ளார்.

இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியரின் 222வது குருபூஜை விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் சீமான்,

“ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்சனை இருக்காது. 

மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, நீட்டுக்கு எதிராகக் கையெழுத்து போன்றவை ஒருபோதும் பயன்தராது. கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கெடுக்க முடியும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா?” 

என்று கூறி உள்ளார்.