சென்னை:  அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம்  போட்டு சென்னை ஸ்டான்லியில் சேர்ந்தது, மருத்துவர்களின் சோதனைகள்  மூலம் அம்பலமாகி  உள்ளது. இதையடுத்து,  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஞானசேகரனுக்கு மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்த நிலையில்,  அவருக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில், அவர் (ஞானசேகரன்) வலிப்பு வந்தது போல் நாடகமாடியது தெரிய வந்துள்ள. அவர்  முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த  திமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர்மீது கடத்தல், திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அத்துடன்,.ஞானசேகர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், பல பெண்களின் வீடியோக்கள் அவர் தொலைபேசியில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூர்வமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.  ஆனால், விசாரணைக்கு ஞானசேகரன் ஒத்துழைக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2வது நாள் விசாரணை நடத்த தயாராக இருந்தபோது,  போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு நேற்று காலை  திடீரென வலிப்பு  வந்ததுபோல கீழே உருண்டு துடித்தார். இதைக்கண்ட போலீசார், அவரை உடனே ன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதித்தனர்.

அவருக்கு அங்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது வலிப்பு ஒரு நடிப்பு என்பது தெரிய வந்துள்ளது. ஞானசேகரன் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வகையில் வலிப்பு வந்தது போல் நடித்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.