திண்டுக்கல்

றாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு ஆவார் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறஒ சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்ததாகவும், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

டாக்டர் சுரேஷ்பாபுவிடம் முதலில் ரூ.20 லட்சத்தை வாங்கிய அங்கித் திவாரி, 2 ஆவது தடவையாக  ரூ.20 லட்சத்தை வாங்கிய போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால்  கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்யப்பட்ட 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதா கடந்த 80 நாட்களுக்கு மேலாக அவர் மதுரை மத்தியச் சிறையில் இருக்கிறார்.

அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால் மதுரை மத்தியச் சிறையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி முன்னிறுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் (மார்ச்) 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி தலைமை ஜுடிசியல் நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதனால் அங்கித் திவாரிக்கு 6-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.