சென்னை

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கோவை மநகராட்சி வ வு சி உயிரியல் பூங்காவில் இருந்து விலக்குகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே உயிரியல் பூங்காவான கோவை வ.உ.சி பூங்கா கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.   இந்த உயிரியல் பூங்காவில் பழைய கட்டமைப்பு வசதிகள் மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையமானது கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தைக் கடந்த 2022 ல் ரத்து செய்து உத்தரவிட்டது.

எனவே மாநகராட்சி வசம் இருந்த வ.உ.சி பூங்கா வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனால் பூங்காவில் இருந்த விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வகையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குப் பறவைகள், பாம்புகள், மரநாய் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன.