விசாகப்பட்டினம் 

ந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆந்திர பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி பொதுக்கூட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதை உடனடியாக கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர்.  இதனால் ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்குச் சென்று பாதுகாப்பாகத் தரையிறங்கியது.  இதையொட்டி மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.