கண்ணூர்

இன்று கண்ணூர் ஆலப்புழா விரைவு ரயில் த்டம் புரண்டு விபத்துக்குள்ளானதால் கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

ice

கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையம் அருகே பரகண்டி பகுதியில் கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயில் தடம் மாற்றம் செய்யச் சென்றது.  இன்று அதிகாலை தடம் மாறிய பிறகு கண்ணூர் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது

அப்போது ரயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் ரயில் நிலையத்தின் சிக்னலை சேதப்படுத்தின.  விபத்தின்போது ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து கடும் போராட்டத்திற்குப் பிறகு கடைசி 2 பெட்டிகளைப் பிரித்து எடுத்தனர். எனவே காலை 5.10 மணிக்குப் புறப்பட வேண்டிய கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்குப் பின்னர் காலை 6.43 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.

மேலும் இந்த விபத்து காரணமாக அந்த வழியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.