சென்னை:

ந்திர முதலமைச்சராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிற்பகல் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் கலந்துகொள்ள திமுகதலைவர்  மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியுடன்  இன்று காலை விஜயவாடா புறப்பட்டுச் சென்றார்.

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா ஐஜிஎம்சி மைதானத்தில் இன்று பிற்பகலில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பல தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தனது மகனுடன் கலந்து கொள்கிறார். இதற்காக இருவரும்  இன்று காலை விமானம் மூலம் விஜயவாடா புறப்பட்டுச் சென்றனர்.