சென்னை: 2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றும், அவர்  தொலைநோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை  சந்தித்து வருகிறார் என ராமதாஸ் புகழாரம் சூட்டி உள்ளார்.

இன்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் அணி தலைவரும், டாக்டர் ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றார். முன்னாள் தலைவர் ஜி.கே.மணி ஒய்வு பெற்ற நிலையில், அவருக்கு கவுரவ பதவி வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியை, அவரது தகப்பானரான, பாமக தலைவர்  டாக்டர் ராமதாஸ் வாழ்த்தி உரையாற்றினார். அப்போது, பாமகவுக்கு  செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளதாகவும், டெல்லியில் ஒரு இளம் தலைவர் (கெஜ்ரிவால்) கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். அதுபோல நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் நமக்கு கிடைத்துள்ளது. இதற்கு  காரணமும் நீங்கள்தான் என கட்சி தொண்டர்களை பார்த்து கூறினார்.

தற்போது,  நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் வகையில், மாவட்ட  தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியவர், இன்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி, தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார். அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள். இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம்தான்.  நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.