சென்னை:
மிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,அண்மையில் நடைபெற்ற 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,ஈரோடு,நாமக்கல்,கோயம்புத்தூர்,நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,சாலை வசதி,குடிநீர் வசதி,தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு,பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் ரூ.17.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்”,என்று அறிவித்தார்.

இந்நிலையில்,2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி,குடிநீர் வசதி,தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு,பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.1718.03 இலட்சம் நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.